தென்காசி

தொடர்மழை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இரண்டாவது நாளாக குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தென்காசி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை முதல் பெய்து தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தொடர் மழை எதிரொலியாக, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT