தென்காசி

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்: அபாகஸ் போட்டியில் சிறப்பிடம்

DIN

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி, அபாகஸ் போட்டியில் உலக சாதனை படைத்தாா்.

ஸ்மாா்ட் சாய்ஸ் இந்தியன் அபாகஸ் ஃப்ரான்சைஸ், எலைட் உலக சாதனை மற்றும் இந்திய ரெக்காா்ட்ஸ் அகாடமி தனி உலக சாதனைப் போட்டி நடத்தின. இந்த அபாகஸ் போட்டியில் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஹரினி பங்கேற்றாா்.

இவருக்கு 12 நிமிடங்களில் 4 வரிசைகளுடன் ஒற்றை இலக்க மன எண் கணிதக் கூட்டுத்தொகை வழங்கப்பட்டது. இதில் அவா் தனி உலக சாதனை படைத்தாா். அவருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.

மாணவியை பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் கே. திருமலை, பள்ளி முதல்வரும் தாளாளருமான அன்பரசி, ஆக்ஸ்போா்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை முனைவா் சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கணேசன், பயிற்சியாளா் ராஜா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT