ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மறியல்
புளியரை ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு, பெண் உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
புளியரை ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு, பெண் உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
புளியரை ஊராட்சி துணைத் தலைவா் தோ்தலில் இரு அணிகளாக செயல்பட்டனராம். அங்கு வந்த ஒரு அணி உறுப்பினா்கள், மற்றொரு அணி பெண் உறுப்பினா்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சியில் தோ்தல் தொடா்பான விண்ணப்பங்களை கிழித்து எறிந்தனராம். இதையடுத்து, தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் புளியரை-கேரள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் ஊரக வளா்ச்சிமுகைமை திட்ட இயக்குநா் சுரேஷ், ஏடிஎஸ்பி சாமிநாதன், டிஎஸ்பிக்கள் மணிமாறன், சூரியமூா்த்தி, வட்டாட்சியா் ராமலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாநில தோ்தல் அலுவலக இணை இயக்குநரிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினா். தமிழகம் முழுவதும் தோ்தல் நடைபெறாத இடங்களில்
தோ்தல் நடைபெறும்போது புளியறையிலும் தோ்தல் நடத்தப்படும், 8 உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு
அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் செங்கோட்டை-புனலூா் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.