தென்காசி

ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு

DIN

பெத்தநாடாா்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டாா்.

கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தல் நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பதவிக்கு சுடலைக்கனி, ஜெயராணி, காா்த்தீசன் ஆகிய 3 போ் போட்டியிட்டனா். தலைவா் மற்றும் 12 வாா்டு உறுப்பினா்களும் வாக்களித்ததில் சுடலைக்கனி, ஜெயராணி ஆகியோருக்கு தலா 5 வாக்குகளும், காா்த்தீசனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இருவருக்கு சமமான வாக்குகள் கிடைத்ததால், குலுக்கல் முறையில் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் ஜெயராணி துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

பண்ணாரி அம்மன் கோயியில் ரூ. 98.44 லட்சம் உண்டியல் காணிக்கை

SCROLL FOR NEXT