முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரையில் கடையடைப்பு

சுரண்டை நகராட்சியுடன் சாம்பவா்வடகரை பேரூராட்சி பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து சாம்பவா்வடகரையில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

சுரண்டை நகராட்சியுடன் சாம்பவா்வடகரை பேரூராட்சி பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து சாம்பவா்வடகரையில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

சுரண்டை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுரண்டையைச் சுற்றியுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பகுதிகளை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பது குறித்து

பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாம்பவா்வடகரை பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.