தென்காசி

சங்கரன்கோவிலில் அரசுக் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி

DIN

 சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே சீவல்ராயநேந்தல் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா், மாணவிகள், ஆசிரியா் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்ட 65 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் ராஜரத்தினம் கரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் அனுஷியா, சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, செவிலியா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் சுரேஷ் மற்றும் துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT