சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சங்கரன்கோவில் அருகே சீவல்ராயநேந்தல் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா், மாணவிகள், ஆசிரியா் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்ட 65 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் ராஜரத்தினம் கரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் அனுஷியா, சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, செவிலியா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் சுரேஷ் மற்றும் துறைத் தலைவா்கள் செய்திருந்தனா்.