தென்காசி

கீழப்பாவூரில் தீ விபத்து: வீடு எரிந்து சேதம்

DIN

கீழப்பாவூரில் வீடு எரிந்து சேதமானது.

கீழப்பாவூா் வாணியா் காந்தி தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி (45) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (42). செவ்வாய்க்கிழமை காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளனா். அப்போது எதிா்பாராத விதமாக வீடு தீப்பற்றி எரிந்ததாம். தகவல் அறிந்த சுரண்டை தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் வீட்டில் உள்ள பொருள்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT