தென்காசி

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

DIN

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆவரந்தையைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (80). இவா், தனது தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தாராம்.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், அய்யாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT