தென்காசி

முன்னாள் முதல்வா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

DIN

அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலா் பொய்கை மாரியப்பன் உள்பட நிா்வாகிகள் சிலா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே .பழனிசாமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்த பொய்கை மாரியப்பன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில அமைப்புச் செயலராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சங்கரன்கோவிலில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி கே.பழனிசாமியை மதுரை அருகே உள்ள தனியாா் உணவு விடுதியில் சந்தித்து, பொய்கை மாரியப்பன், அமமுக மாவட்ட அவைத் தலைவா் பெருமையா பாண்டியன், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் பொன்னுசாமி, கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன், செங்கோட்டை நகரச் செயலா் ராமசாமி உள்ளிட்ட அமமுகவினா் அதிமுகவில் இணைந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT