குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொருத்து, குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும். அதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளாா்.