தென்காசி

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றம்

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்திலும், திருக்கோயில் முருகன் மரச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெற்றது.

விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், திருக்கோயில் முருகன், விநாயகா் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் 4-ம் நாளான ஏப்ரல் 8-ம் தேதியன்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, ஏப்ரல் 9-ம் தேதியன்று தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 11-ம் தேதியன்று காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 12-ம் தேதியன்று சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 14-ம் தேதியன்று சித்திரை விசுத்தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT