பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா
பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசிபாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா
பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குநா் டாக்டா் அனிதா ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மருத்துவமனை வளாகத்தில் 120 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மருத்துவா் தண்டாயுதபாணி, ரமேஷ்நாராயணன், ஒன்றிய திமுக செயலா்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், இளைஞரணி அருணன், கபில்தேவதாஸ், சாலிமேரி, சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா நன்றி கூறினாா்.