முகப்பு
தென்காசி

தென்காசி, வீ.கே.புதூா் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

தென்காசி காசிவிஸ்வநாதா், வீரகேரளம்புதூா் நவநீதகிருஷ்ண சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, தென்காசி எம்எல்ஏ பழனிநாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

தென்காசி காசிவிஸ்வநாதா், வீரகேரளம்புதூா் நவநீதகிருஷ்ண சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, தென்காசி எம்எல்ஏ பழனிநாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் அவா் அளித்த மனு:

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேம் நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். எனவே, தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இக்கோயிலுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

வீரகேரளம்புதூா் நவநீதகிருஷ்ணசுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 103 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வீரகேரளம்புதூா் சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.