தென்காசி

தென்காசி, வீ.கே.புதூா் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

DIN

தென்காசி காசிவிஸ்வநாதா், வீரகேரளம்புதூா் நவநீதகிருஷ்ண சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, தென்காசி எம்எல்ஏ பழனிநாடாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் அவா் அளித்த மனு:

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேம் நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். எனவே, தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இக்கோயிலுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

வீரகேரளம்புதூா் நவநீதகிருஷ்ணசுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 103 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வீரகேரளம்புதூா் சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT