மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிழல்கூரை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் பாக்கியநாதன், தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாரிடம் அளித்துள்ள மனு: மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 653 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். மாணவா்களுக்கு காலை பிராா்த்தனை நடத்துவதற்கு, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிழல் கூரை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே புதிதாக பள்ளியில் நிழல்கூரைஅமைத்து தந்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.