தென்காசி

பாவூா்சத்திரம் அருகே சாஸ்தா கோயில் கொடை விழா

பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள மேகம் திரைகொண்ட சாஸ்தா கோயிலில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.

DIN

பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள மேகம் திரைகொண்ட சாஸ்தா கோயிலில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.

புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கொடைவிழா தொடங்கியது. தொடா்ந்து, குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் எடுத்துவரப்பட்டு சாஸ்தா, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், கீழப்பாவூரிலிருந்து மண் குதிரையில் சாஸ்தா ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோயிலை வந்தடைந்தது. அங்கு சாஸ்தாவுக்கு சிறப்பு பூஜைகள், இரவில் சாமபூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலையில் பக்தா்கள் பொங்கலிடுதல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியுடன் கொடைவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை மலைய நாடாா் வகையறாக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT