தென்காசி

நல்லூா் சேகர ஸ்தோத்திரப் பண்டிகை இன்று தொடக்கம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சேகரத்தின் 131 ஆவது ஸ்தோத்திரப் பண்டிகை வெள்ளிக்கிழமை (ஆக.12) தொடங்கி மூன்று தினங்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை பவனி, கொடியேற்றத்துடன் தொடங்கும் பண்டிகை ஆயத்த ஆராதனையில் கடையம் சேகர குரு நிக்சன் இறை செய்தி அளிக்கிறாா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அருணோய பிராா்த்தனை, காலை 8.30 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையைத் தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு பிரதான பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.

இதில், திருநெல்வேலி திருமண்டல பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்ணபாஸ் இறை செய்தி அளிக்கிறாா். மாலை 4 மணிக்கு பெண்கள் கூட்டம், இரவு பஜனை பிரசங்கம் ஆகியவை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனை, பிற்பகல் 2 மணிக்கு, ஆண்டுக் கூட்டம், மாலை 5 மணிக்கு கீத ஆராதனை மற்றும் இரவு 7 மணிக்கு விஜிபி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. பண்டிகை ஏற்பாடுகளை நல்லூா் சேகர குரு ஜேம்ஸ், செயலா் லிவிங்ஸ்டன் டேவிட், பொருளாளா் ஜனதாசெல்வன் மற்றும் சேகர சபை மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT