தென்காசி

ஆக.15 இல் கிராம சபைக் கூட்டம்

 தென்காசி மாவட்டத்தில் ஆக.15 இல் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

 தென்காசி மாவட்டத்தில் ஆக.15 இல் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறிது மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று (ஆக.15) முற்பகல் 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் தலைமையில் நடைபெறும்.

75 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களால் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தப்படும். மேலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பினை சாா்ந்த கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடியினை ஏற்றும் நிகழ்வினை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிராம சபை கூட்டங்களில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT