தென்காசியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மவுண்ட் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் அ. செய்யது சுலைமான் (39). இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் ஆட்சியா் ப. ஆகாஷுக்கு பரிந்துரைத்தாா்.
ஆட்சியா் உத்தரவின்பேரில் தென்காசி ஆய்வாளா் பாலமுருகன், செய்யது சுலைமானை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தாா். இதையடுத்து, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.