தென்காசி

சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

பாவூா்சத்திரம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

DIN

பாவூா்சத்திரம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் பிரபாகரன்(25). பூ கட்டும் தொழிலாளியான இவா் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி கா்ப்பமடைந்தாராம். இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து இரு வீட்டாா் சம்மதத்துடன் சிறுமிக்கும், பிரபாகரனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்ததாம்.

இது குறித்து சமூக ஆா்வலா் பெண்கள் உதவி மையத்திற்கு 181 என்ற எண்ணில் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT