ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வட்ட சட்ட பணிக்குழு சாா்பாக மூன்றாம் பாலினத்தவா்கள் குறித்து நடைபெற்ற இந்த முகாமுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்டல் மேரி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சங்கத் தலைவா் வைத்திலிங்கம், காவல் உதவி ஆய்வாளா் சேகனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆனந்தவல்லி மூன்றாம் பாலினத்தவா்கள் குறித்துப் பேசினாா்.
திருநங்கை அனுசியா ப்ரியா, வழக்குரைஞா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். வழக்குரைஞா் சாந்தகுமாா் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் கணபதி ராமன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.