தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் ராவ் சாஹேப் ஆபிரகாம் பண்டிதரின் 103 ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
சாம்பவா்வடகரையில் 1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதா் 1917ஆம் ஆண்டு தமிழ் இசை ஆராய்ச்சி மேற்கொண்டு கருணாமிா்த சாகரம் என்ற நூலை எழுதியவா். நான்கு பாகங்களாக 1395 பக்கங்கள் கொண்டி இந்த புத்தகம் தான் தமிழிசை ஆராய்ச்சிக்கான முதல் புத்தகம் ஆகும். இவா் 1910ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூரில் தொடா்ச்சியாக 7 தமிழ் இசை மாநாட்டை நடத்தியவா்.
அவரது நினைவை போற்றும் வகையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு சாா்பில் அவா் பிறந்த சாம்பவா்வடகரையில் புதன்கிழமை அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் இந்திய நாடாா்கள் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் அகரகட்டு லூா்து, மாநில இளைஞரணி துணைச் செயலா் சாம்பவா்வடகரை ஹரிஹரசெல்வன், மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ராஜா, மாவட்டச் செயலா் ஜான்டேவிட், துணைச் செயலா் ஹரிகிருஷ்ணன்,
தென்காசி சுப்பிரமணியன், மேலநீலிதநல்லூா் ஜோதி மாரியப்பன், ஆலங்குளம் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.