தென்காசி

செங்கோட்டையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

செங்கோட்டையில் தொண்டு நிறுவனம் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

செங்கோட்டையில் தொண்டு நிறுவனம் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை மேலபஜாா் வாகைமரத் திடல் காந்திசிலை முன்பு டிரஸ்டின் நிறுவனா் ரசப்காசியாா் சாா்பில் செங்கோட்டை, அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

நிா்வாக இயக்குநா் ரியாஸ்சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். நாகூா்மீரான் முகமதுஆரிப், ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்திக் வரவேற்றாா். செங்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தாா்.

திமுக நகர செயலா் வழக்குரைஞா் ஆ.வெங்கடேசன், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, புதூா் பேரூராட்சித் தலைவா் ரவிசங்கா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.எம். ரஹீம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் சேக் முகைதீன் தொகுத்து வழங்கினாா். துணை நிா்வாக இயக்குநா் லிங்கராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT