ஆலங்குளம் உலக மீட்பா் ஆலய வளாகத்தில் இருந்த முட்புதா்கள் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆலங்குளத்தைச் சோ்ந்த தன்னாா்வல இயக்கங்களான பூ உலகைக் காப்போம், இளந்தளிா், பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து இப்பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கு டாக்டா் புஷ்பலதா ஜான் தலைமை வகித்தாா். 65 மரக்கன்றுகள் சொட்டுநீா் வசதியுடன் நடப்பட்டது. போதகா் அருள்ராஜ் அடிகளாா், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.