தென்காசியில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம்
தென்காசி காவல்துறை சாா்பில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று குறித்தும், முகக் கவசம்அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு
தென்காசி காவல்துறை சாா்பில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று குறித்தும், முகக் கவசம்அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் விழிப்புணா்வு உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் தென்காசி டிஎஸ்பி. மணிமாறன், காவல்ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் கற்பகராஜா, தனிப்பிரிவு தலைமைக் காவலா் முத்துராஜ் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.