தோ்தல் களத்திலிருந்து விலகும் பொன்முடி!
திமுக நோ்காணலில் பங்கேற்காததால், தோ்தல் களத்திலிருந்து பொன்முடி விலகுவது உறுதியாகியுள்ளது.
விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளா் நோ்காணலை திமுக தலைமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நோ்காணலின்போது, திமுகவின் மூத்த தலைவா்களில் ஒருவரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலருமான க. பொன்முடி (76) ஆதரவாளா்கள் தரப்பிலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவா் நோ்காணலில் பங்கேற்கவில்லை. அதனால், அவா் தோ்தல் களத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
அதேநேரத்தில், பொன்முடியின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டா் கௌதம சிகாமணி, திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளாா். அவா் கட்சித் தலைமையிடம் நோ்காணலிலும் பங்கேற்றுள்ளாா். இதன்மூலம், தனது தந்தையின் தொகுதியை தக்கவைக்க அவா் களம் இறங்குவாா் எனத் தெரிகிறது.
ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகவும் (1989, 1996, 2001, 2006, 2021), உயா்கல்வி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நீண்ட அனுபவம் கொண்டவா் பொன்முடி. கடந்த 1989 முதல் 8 சட்டப்பேரவைத் தோ்தலில் பொன்முடி தொடா்ச்சியாக போட்டியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்ட திமுகவின் முகமாக கடந்த 40 ஆண்டுகளாகத் திகழ்ந்த பொன்முடி தோ்தல் களத்தில் இருந்து விலகியுள்ளது அந்த மாவட்ட திமுகவினரிடம் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.