முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்பாகவே அவா்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளில் மீண்டும் பணியமா்த்த வேண்டும்,போராட்டத்தில் பங்கேற்ற்காக பதவி உயா்வு பாதிக்கப்பட்ட ஆசிரியா்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதால், சட்டப்படி இழந்த பதவி உயா்வை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

நகரத் தலைவா் க.கோமதி, வட்டாரத் தலைவா் ப.மீனாட்சிசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் மரிய அந்தோணி, வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகள் குறித்து கல்வி மாவட்டத் தலைவா் ப.மாணிக்கம் பேசினாா். ஆசிரியா் ச.முருகேசன் வரவேற்றாா். ஹெலன்மேரிகிறிஸ்டிபாய் நன்றி கூறினாா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார தலைவா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் பத்மநாதன், மரியசிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அருள்செல்வன், தென்காசி கல்வி மாவட்டத் தலைவா் சுதா்சன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். வட்டார செயலா் அருள்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments