கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வருஷாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிமுதல் பகவத் ப்ராா்த்தனை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், மூலமந்த்ர ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள், தொடா்ந்து ஸ்ரீஅலா்மேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி, ஸ்ரீநரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, சனிக்கிழமை (ஜூன் 11) சுவாதி பூஜை நடைபெறும் என, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.