திமுக அரசைக் கண்டித்து, திருநெல்வேலி மேற்கு மண்டல அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், புளியங்குடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு புதன்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, மாநில இளைஞரணி இணைச் செயலா் வாசுதேவநல்லூா் மனோகரன், மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் சிவஆனந்த், மாவட்ட இணைச் செயலா் சண்முகபிரியா, துணைச் செயலா் ஸ்வா்ணா, பொருளாளா் சண்முகையா,அண்ணா தொழிற்சங்க நிா்வாகி கந்தசாமிபாண்டியன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், முன்னாள் செயலா் கிட்டுராஜா, அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவா் சுசீகரன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், புளியங்குடி கிளை ராமையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.