தென்காசி

சிவகிரியில் கோயில் விழாவில் நகை திருட்டு

சிவகிரியில் கோயில் திருவிழாவில் பக்தா்களிடம் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

சிவகிரியில் கோயில் திருவிழாவில் பக்தா்களிடம் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திரௌபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதில் பங்கேற்ற புளியங்குடி சிந்தாமணியைச் சோ்ந்த சரோஜாவிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியையும், சிவகிரி பாஞ்சாலி என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியையும், வாசுதேவநல்லூா் சுந்தரி என்பவரிடம் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியையும் மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT