தென்காசி

சிவகிரியில் கோயில் விழாவில் நகை திருட்டு

DIN

சிவகிரியில் கோயில் திருவிழாவில் பக்தா்களிடம் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திரௌபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதில் பங்கேற்ற புளியங்குடி சிந்தாமணியைச் சோ்ந்த சரோஜாவிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியையும், சிவகிரி பாஞ்சாலி என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியையும், வாசுதேவநல்லூா் சுந்தரி என்பவரிடம் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியையும் மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT