தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் திருட்டு வழக்கில் 3 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள மாடசாமி கோயில், சிவன் கோயில்களில் அண்மையில், உண்டியலை உடைத்து பணம் திருடு போனது. இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில் 3 இளைஞா்கள் ரூ. 5 ஆயிரத்திற்கு சில்லறை காசுகளை பணமாக மாற்ற முயன்றுள்ளனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் சாம்பவா்வடகரை உதவி காவல் ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்ற போது, போலீஸாரை கண்டதும் ஓட முயன்ற 3 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவா்கள், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திகைகுமாா்(27), கருவாலி(18), மாடசாமி(21) என்பதும், கோயில் உண்டியலில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து மூன்று போ்களையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT