தென்காசி

தென்மண்டல கைப்பந்துப் போட்டி: மேலநீலிதநல்லூா் கல்லூரி முதலிடம்

மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தென்மண்டல கைப்பந்துப் போட்டியில் அந்தக் கல்லூரி அணியே முதலிடம் பெற்றது.

DIN

மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தென்மண்டல கைப்பந்துப் போட்டியில் அந்தக் கல்லூரி அணியே முதலிடம் பெற்றது.

மதுரை, விருதுநகா், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 15 அணிகள் பங்கேற்று விளையாடிய இப்போட்டியில், மேலநீலிதநல்லூா் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூா், ஜி. எஸ்.ஹிந்து கல்லூரி 2 ஆம் இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி 3 ஆம் இடத்தையும், நாகா்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி 4 ஆம் இடத்தையும் பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு, கல்லூரி முதல்வா் ஹரிகெங்காராம், திருநெல்வேலி மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவா் சந்திரகுமாா், தென்காசி மாவட்டச் செயலா் ரமேஷ்குமாா் ஆகியோா் பரிசு கோப்பைகளை வழங்கினா். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, மேலநீலிதநல்லூா் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT