தென்காசி

‘அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டும்’

DIN

அரியப்பபுரம்-திப்பணம்பட்டி சாலையைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, அரியப்பபுரம் ஊராட்சித் தலைவா் த.தினேஷ்குமாா் தென்காசி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்- பராமரிப்பு பிரிவு உதவி கோட்டப்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: கீழப்பாவூா் ஒன்றியம், அரியப்பபுரம்- நாட்டாா்பட்டி- திப்பணம்பட்டி தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

இதேபோல், தென்காசி-அம்பை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திரவியநகரில் மழைக்காலங்களில் மழை தண்ணீரும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வெளியே செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள வடக்கு பாலம் முதல் தெற்கே குளம் வரை புதிய வாருகால் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT