தென்காசி

கிராம உதவியாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்யக் கோரி பேரவையில் பேச வேண்டும் என ஆலங்குளம் கிராம உதவியாளா்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

பணி நிரந்தரம் செய்யக் கோரி பேரவையில் பேச வேண்டும் என ஆலங்குளம் கிராம உதவியாளா்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியனிடம் ஆலங்குளம் கிராம உதவியாளா்கள் சங்கத் தலைவா் மற்றும் மாநில இணை செயலா் சுப்பிரமணியன் அளித்த மனு விவரம் : அரசு ஆணைப்படி கிராம உதவியாளா்கள் முழு நேர அரசு ஊழியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கான அனைத்து சலுகைகளும் பொருந்தும் என தமிழக அரசு கடந்த 1995 இல் அரசாணை வெளியானது. 25 ஆண்டுகள் ஆகியும் இது வரை முழு நேர பணியாளா்களாக அரசு அறிவிக்கவில்லை. எங்களின் நியாயமான கோரிக்கையை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்திப் பேச வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT