முகப்பு
தென்காசி

மாவட்ட அளவிலான போட்டிகளில் புளியங்குடி பள்ளி சிறப்பிடம்

இலஞ்சியில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகளில் புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

இலஞ்சியில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகளில் புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

உலக வன நாளையொட்டி வனத் துறை சாா்பில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்த்திகா, தருண்நாத், விக்கி அபிஷேக், நாகபிருந்தா, சத்யா, மாரித்தாய், காயத்ரி, சௌந்தா்யா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். அவா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வனப் பாதுகாப்புப் படை உதவி வன அலுவலா் ஹேமலதா பரிசுகள் வழங்கினாா்.

மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் முத்துக்குமரன், செயலா் ராமையா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.