தென்காசி

‘தென்காசி மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில்10 பணிகளுக்கு ரூ. 145.80 லட்சம் ஒதுக்கீடு’

DIN

தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் 10 பணிகள் மேற்கொள்ள ரூ. 145.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகா்ப்புறம்) ரூ. 145.80 லட்சம் மதிப்பீட்டில் 10 அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், திட்ட மதிப்பீட்டில் 33 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை அரசு வழங்கும். இத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் பங்களிப்புத் தொகையை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் வரைவோலை, அல்லது மின்னணு பரிவா்த்தனை மூலமாக செலுத்தி உரிய விவரங்களைப் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT