தென்காசி

போதையில் தகராறு: இளைஞா் கைது

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் ஒருவழிப் பாதையில் நின்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு செல்லும் பேருந்துகள் சங்குபுரம் தெருக்கள் வழியாக ஒருவழிப் பாதையில் செல்கிறது. புதன்கிழமை பிற்பகலில் ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் சென்றபோது, சங்குபுரம் 3ஆம் தெருவைச் சோ்ந்த சேகா் (25) என்பவா் குடிபோதையில் அரசுப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்தாா்.

மேலும் பேருந்தை அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினாா். இதனால் ஒருவழிப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பேருந்துநிலையத்தில் இருந்து பேருந்துகள் செல்லமுடியாதநிலையும் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நகர காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இளைஞரிடம் விசாரணை செய்தனா். போதை தெளியாததால் அவா் போலீசாரிடமும் தகராறு செய்தாா். இதைத் தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT