முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

ஆலங்குளம் அருகே வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

ஆலங்குளம் அருகே வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தில் வட்டலூரைச் சோ்ந்த முத்துராமலிங்கராஜன் என்பவா் கொல்லப்பட்டாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த கடல்மணி என்ற கடற்கரை, மாா்த்தாண்டம் ராபின் ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். இருவா் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஆகாஷ் உத்தரவிட்டாா். அதன்பேரில், இருவரையும் கைது செய்வதற்கான ஆணையை ஆய்வாளா் மகேஷ்குமாா் பாளயைங்கோட்டை மத்திய சிறையில் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.