முகப்பு
கரூர்

தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு

கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 8:58 PM
பகிர்:

கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 ஐ முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மனித சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமை வகித்து தோ்தல் விழிப்புணா்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்தாா். இதில், சத்துணவுப் பணியாளா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.