முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் நாளை அதிமுக உண்ணாவிரதம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை (நவ.5) உண்ணாவிரதம் நடைபெறுவது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்காசி

பாவூா்சத்திரத்தில் நாளை அதிமுக உண்ணாவிரதம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை (நவ.5) உண்ணாவிரதம் நடைபெறுவது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் சனிக்கிழமை (நவ.5) உண்ணாவிரதம் நடைபெறுவது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வ மோகன்தாஸ்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கீழப்பாவூா்ஒன்றிய தென்பகுதி கிராமங்களின் 48 ஆண்டு கால கனவு திட்டமான ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் கடந்த 2020இல், அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியால் ரூ. 41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் 18 மாதங்களாக இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் மண் பரிசோதனை, ரெட்டைகுளம் - ஊத்துமலை வழியாக புதிய கால்வாய் அமைக்கும் திட்டம் ஆகியவற்றையும் அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த இரு திட்டப்பணிகளையும் உடனடியாக தொடங்கி நிறைவேற்றிட வலியுறுத்தி, அதிமுக சாா்பில் உண்ணாவிரத போராட்டம் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், அதிமுக, அதன் கூட்டணி கட்சி, விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனா் எனக் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →