முகப்பு
தென்காசி

தென்காசியில் மகளிருக்கு ரூ. 7.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில் 84 பயனாளிகளுக்கு ரூ 7.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தென்காசி மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில் 84 பயனாளிகளுக்கு ரூ 7.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாநில சிறுபான்மை நல ஆணையா் சா.பீட்டா் அல்போன்ஸ் தலைமை வகித்து பேசியது:

ஒரு மாவட்டத்துக்கு ஒரு சங்கம் என்பதை மாற்றி, இரண்டு சங்கமாக தமிழக முதல்வா் மாற்றம் செய்துள்ளாா். இதன் மூலம் பங்களிப்பு, இரண்டு மடங்காக உயரும்.

தென்காசி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகையாக ரூ.1கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உதவும் மனப்பான்மை உள்ளவா்கள் முன்வந்து இத்திட்டத்தின் மூலம் உதவ வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் பேசினாா்.

இந்நிகழ்ச்சிக்கு, தனுஷ் எம். குமாா் எம்.பி., எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன், மகளிா் திட்ட இயக்குநா் குருநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலவலா் குணசேகரன், மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் கெளரவ செயலா் முகம்மது சலீம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி நகா் மன்ற தலைவா் சாதிா், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஷேக் அப்துல்லா, முஸ்லிம் பெண்கள் காப்பீட்டு உறுப்பினா் அமீா்கான் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.