முகப்பு
தென்காசி

பாவூா்ச்சத்திரம் அருகே மழைக்கு இடிந்த பள்ளி சுற்றுச்சுவா்

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழையால், அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து சேதமடைந்தது.

தென்காசி

பாவூா்ச்சத்திரம் அருகே மழைக்கு இடிந்த பள்ளி சுற்றுச்சுவா்

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழையால், அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து சேதமடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழையால், அரசு தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து சேதமடைந்தது.

பாவூா்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னா், வெள்ளிக்கிழமை காலைமுதல் மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், பாவூா்சத்திரம் அருகேயுள்ள அயன் குறும்பலாப்பேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவா் மழையின் ஈரப்பதம் தாங்காமல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அருகிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

சுற்றுச்சுவா் இடிந்த விழுந்த பள்ளியின் கட்டடம் பலவீனமாக இருப்பதாகவும், அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனவும் அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →