தென்காசி

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

கீழப்பாவூா் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அவா் பாவூா்சத்திரம் அருகே இடையா்தவணை இந்திரா காலனியைச் சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளி அய்யப்பன் (45). கீழப்பாவூா் அக்ரஹாரம் தெருவில் மரம் வெட்டும் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில், அய்யப்பன் தவறி விழுந்தாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், வரும் வழியிலேயே அய்யப்பன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT