தென்காசி

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தென்காசி ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவது,

காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டதலைவா் சுமதி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி வேலு முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் கோவில் பிச்சை, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கங்காதரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். மாவட்ட

பொருளாளா் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT