குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இரு அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் அருவிகளில் நீா்வரத்து குறைந்தது. இதையடுத்து, குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. அவா்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.