தென்காசி

சோ்ந்தமரத்தில் குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சோ்ந்தமரம் அருகே கடந்த மாதம் மனைவியுடன் சோ்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய வீரசிகாமணியைச் சோ்ந்த த.இசக்கிமுத்து(29), சு.காளிராஜ்(25), க.அங்குராஜ்(23) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டடாா். இதையடுத்து 3 பேரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணையை பாளை சிறையில் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் சமா்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT