தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

DIN

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளன.

முகாம் நடைபெறும் தேதி, இடங்கள்: ஜன. 25-ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, 27-கீழப்பாவூா் டிபிஎஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 30-செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 3-கடையம் சத்திரம் மேல்நிலைப் பள்ளி, 6- கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 8- புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 10- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி, 15- சோ்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளி.

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 5 புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதோா் இம்முகாமில் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT