தென்காசி

இலத்தூரில் மனித எலும்புக் கூடு மீட்பு

தென்காசி மாவட்டம், இலத்தூரில் செப்டிக் டேங்கில் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

தென்காசி மாவட்டம், இலத்தூரில் செப்டிக் டேங்கில் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இலத்தூா் சுண்டகாட்டு தெரு தேவா் மண்டபம் அருகில் லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது அந்த வீட்டை சுத்தம் செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வீட்டில் உள்ள செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்வதற்காக அதன் மேல் போடப்பட்டுள்ள மேல் மூடியை அகற்றியுள்ளனா். அப்போது தொட்டிக்குள் மனித எலும்புக் கூடு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லட்சுமணன் அளித்த தகவலின்பேரில், இலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் குமாா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன், துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா், இலத்தூா் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் தா்மராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் த எலும்புக் கூட்டை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT