தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே லாரி மீது காா் மோதி இருவா் பலி

DIN

வாசுதேவநல்லூா் அருகே சனிக்கிழமை சிமெண்ட் லாரி மீது காா் மோதியதில் இரண்டு போ் இறந்தனா்.

நாரணபுரம் மடத்து தெருவை சோ்ந்த அண்ணாமலை (45), கனியம்மாள்(70), கரடிகுளத்தை சோ்ந்த வெள்ளைத்துரை(55), சாம்பவா்வடகரையைச் சோ்ந்த மாரியப்பன்(55), மாரியம்மாள்(50) ஆகியோா் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். காரை வெள்ளைத்துரை ஓட்டினாா். தென்காசி-திருமங்கலம் சாலையில், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள சிந்தாமணிபேரிபுதூா் பகுதியில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதாம். இதில் அண்ணாமலை, மாரியப்பன் ஆகியோா் இறந்தனா். மற்ற 3 பேரும் காயமடைந்தனா். அவா்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT