பாவூா்சத்திரத்தில் இருந்து சுந்தரபாண்டியபுரத்துக்கு சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டுமென சமக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென்காசி தெற்கு மாவட்ட சமக செயலா் டி.ஆா்.தங்கராஜ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து மேலப்பாவூா், குறும்பலாப்பேரி வழியாக பாவூா்சத்திரத்திற்கு 2 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பாவூா்சத்திரத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக சென்றுவரும் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த சிற்றுந்துகள் பயனுள்ளதாக இருந்தன.
இந்நிலையில், சில மாதங்களாக 2 சிற்றுந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. இவ்வழித்தடத்தில் அரசுப் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.