தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் கிரிவலம்
தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் மேற்கொண்டனா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் மேற்கொண்டனா்.
காா்த்திகை பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்ற பக்தா்கள், பின்னா் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளா்கள் நலமுடன் மீண்டுவர சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா்.
கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
Advertisement